Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10,000 சதுரடியில் 1000 மாணாக்கர்கள் அமர்ந்து உலக சாதனை

ஆகஸ்டு 07, 2019 05:25


திருவள்ளூர்: ஆவடி காந்தி நகரில் உள்ள தனியார் பள்ளியில் சுகந்திர தினத்தை முன்னிட்டும், உலக சுற்றுசூழலை வலியுறுத்தியும் 
பூமியை பாதுகாப்போம் என்று 10, 000 சதுரடியில் 1000 மாணாக்கர்கள்  அமர்ந்து பூமி வடிவத்திலும் மற்றும் SAVE EARTH என அமர்ந்தும் உலக சாதனை புரிந்தனர்.

ஆவடி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆவடி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் காளிராஜன் மற்றும் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் s சிவகுமார், பள்ளி தலைமை அம்மையார் ஆரோக்கியம், ஆகியோர் தலைமையில் வெகுவாக நடைபெற்றது.

பின்னர் பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் குழந்தைதரஸ் கூறும்போது தற்போதுள்ள சூழ்நிலையில் கால மாற்றங்கள் மூலம் பல்வேறு பிரச்சினைகள் பூமியில் நடைபெற்று வருவதாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் செய்த இந்த நிகழ்ச்சி பெருமை அளிக்கிறது என்றார்.

மேலும் இந்த நிகழ்வு இந்திய உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆதற்கான சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் ஆகியவை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்